Ads Top

ந.பிச்சமூர்த்தி / PICHAMOORTHY HISTORY IN TAMIL

ந.பிச்சமூர்த்தி / PICHAMOORTHY HISTORY IN TAMIL
  • ந.பிச்சமூர்த்தி
    (15.08.1900 – 04.12.1976) தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடேச தீக்ஷிதர் - காமாட்சியம்மாள்க்கு
    15.08.1900 அன்று பிறந்தார்.
  • இவருடைய இயற்பெயர் ந.வேங்கட
    மகாலிங்கம்.
  • To Know more about - Athipazham Benefits in Tamil
  • தத்துவார்த்தம் பிணைந்த
    கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி.
  • தமிழ்ப் புதுக்கவிதையின்
    தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி.

வாழ்க்கை

  • பிச்சமூர்த்தி கும்பகோணத்தில்
    தன் பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்தார்.
  • தத்துவத்தில் பட்டம்
    பெற்று, சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
  • 1925 முதல் 1938 வரை
    வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். 1939 முதல் 1959 வரை இந்து அறநிலையத்துறை அதிகாரியாகப்
    பணிபுரிந்தார்.
  • பிச்சமூர்த்தி, நவ இந்தியா
    பத்திரிகையில் சிறிது காலம் பணியில் இருந்தார்.
  • இவரின் எழுத்துக்கள்
    சுதேசமித்திரன், சுதந்திர சங்கு, தினமணி, மணிக்கொடி போன்ற பத்திரிகைகளில் வெளிவரத்தொடங்கின.
  • இந்தத் தத்துவ மரபில்
    வாழ்ந்து வந்த செழுமையின் உள்தூண்டல் அவரது படைப்பு மனோபாவத்தின் அடிநாதமாக இழையோடியது.
  • "இலக்கியமும் நம்மைப்
    போல நம்மையறியாமலே - ஒருவேளை நம்மையும் மீறி - உந்தித் தள்ளும் சக்தி அல்லது எதுவோ..."
    என நம்பினார். இந்த நம்பிக்கையின் சோதனை முயற்சிகளாக வே.பிச்சமூர்த்தியின் படைப்புகள்
    வெளிப்பட்டன.
  • புதிய படைப்புச் சூழலில்
    மரபுக்கவிதையின் யாப்புப் பிடியிலிருந்து விடுபட்ட கவிதைகள் புதுக்கவிதைகள் எனப்பட்டன.
  • பாரதியாரின் வசன கவிதையைத்
    தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ந.பிச்சமூர்த்தி ஈடுபட்டார்.
  • எனவே, அவர் புதுக்கவிதையின்
    தந்தை’ என்று போற்றப்படுகிறார்.
  • புதுக்கவிதையை
    "இலகு கவிதை, கட்டற்ற கவிதை, விலங்குகள் இலாக் கவிதை, கட்டுக்குள் அடங்காக் கவிதை
    என்று பல்வேறு பெயர்களில் குறிப்பிடுகின்றனர்.
  • ந. பிச்சமூர்த்தி தொடக்க
    காலத்தில் வழக்குரைஞராகவும் பின்னர் இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத் துறை அலுவலராகவும்
    பணியாற்றினார் ஹனுமான், நவஇந்தியா ஆகிய இதழ்களின் துணை ஆசிரியராகவும் இருந்தார்.
  • இவர் புதுக்கவிதை, சிறுகதை,
    ஓரங்க நாடகங்கள், கட்டுரைகள் ஆகிய இலக்கிய வகைமைகளைப் படைத்தவர். இவரின் முதல் சிறுகதை
    - 'ஸயன்ஸூக்கு பலி" என்பதாகும்.
  • 1932 இல் கலைமகள் இதழ்
    வழங்கிய பரிசைப் பெற்றார். பிக்ஷுஷு", ரேவதி ஆகிய புனைபெயர்களில் படைப்புகளை எழுதினார்.

சிறப்பு பெயர்கள்

  • சிறுகதையின் சாதனை
  • புதுக்கவிதையின் முன்னோடி
  • தமிழ் புதுக்கவிதை இயக்கத்தின்
    தோற்றுநர்
  • புதுக்கவிதையின் முதல்வர்
  • புதுக்கவிதை இயக்கத்தின்
    விடிவெள்ளி
  • புதுக்கவித இரட்டையர்
    – ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராசகோபாலன் (அழைத்தவர் - வல்லிக்கண்ணன்)

புனைப் பெயர்

  • ரேவதி
  • பிச்சு
  • ந.பி
  • படைப்புகள்

சிறுகதைகள்

  • பதினெட்டாம் பெருக்கு
  • நல்ல வீடு
  • அவனும் அவளும்
  • ஜம்பரும் வேட்டியும்
  • மாயமான்
  • ஈஸ்வர லீலை
  • மாங்காய்த் தலை
  • மோகினி
  • முள்ளும் ரோசாவும்
  • கொலுப்பொம்மை
  • ஒரு நாள்
  • கலையும் பெண்ணும்
  • இரும்பும் புரட்சியும்
  • பாம்பின் கோபம்
  • விஞ்ஞானத்திற்குப் பலி
    (முதல் சிறுகதை)
  • இரட்டை விளக்கு

புதுக்கவிதை

  • கிளிக்குஞ்சு
  • பூக்காரி
  • வழித்துணை
  • கிளிக்கூண்டு
  • காட்டுவாத்து
  • புதுக்குரல்கள் (தமிழின்
    முதல் புதுக்கவிதை தொகுதி)
  • காதல் (இவரின் முதல்
    கவிதை)
  • உயிர்மகள் (காவியம்)
  • ஆத்தூரான் மூட்டை
  • மேற்கோள்
  • வாழ்க்கைப்போர்
  • முண்டி மோதும் துணிவே
    இன்பம்
  • உயிரின் முயற்சியே வாழ்வின்
    மலர்ச்சி
  • ஜீவா! விழியை உயர்த்து
  • சூழ்வின் இருள் என்ன
    செய்யும்
  • கழகு பெற்ற வெற்றி நமக்கும்
    கூடும்

சிறந்த தொடர்கள்

  • இலக்கியமும் நம்மைப்
    போல நம்மையறியாமலே - ஒருவேளை நம்மையும் மீறி - உந்தித் தள்ளும் சக்தி அல்லது எதுவோ..."
    என நம்பினார்.

பொங்கல் வழிபாடு

  • வாழ்க்கையும் காவிரி
    அதிலெங்கும் கிளிக்கூண்டு
  • நீயன்றி மண்ணுண்டோ, விண்ணுண்டோ,
  • ஒளியுண்டோ, நிலவுமுண்டோ,
  • நீருண்டோ, என்னிடம் வாழ்த்துப்
    பொருளுமுண்டோ?
  • கதிரவா கனிந்து வருவாய்!
    கரும்பு மனமும் இனிபாம் உயிரும்
  • நின்னடி படைத்தது விட்டோம்
  • கதிரவா! ஏற்று மகிழ்வாய்
  • உயர்ந்தவா, உயிரின் முதலே!

சிந்தனைச் சிதறல்கள்

  • எனக்கு எப்பொழுதும் உணர்ச்சிதான்
    முக்கியம். தர்க்கரீதியான அறிவுக்கு இரண்டாவது இடம்தான் தருவேன்.
  • ஆகையால் எப்பொழுதுமே
    ஒரு திட்டம் போட்டு குறிப்பிட்ட கருத்தை வற்புறுத்துவதென்ற எண்ணத்துடன் ஒன்றுமே நான்
    எழுதவில்லை.
  • உணர்வே என் குதிரையாகி
    விட்டபடியால் நான் ஒரு சமயம் நட்சத்திர மண்டலத்தில் பொன்தூள் சிதறப்பறப்பேன். ஒரு சமயம்
    வெறும் கட்டாந்தரையில் "ஏபால்டில்" செய்வேன்.
  • என் மனதிலும் இந்த இரண்டு
    அம்சங்கள் பின்னிக்கிடப்பதை நான் கவனித்திருக்கிறேன்.
  • ஒரு பகுதி சிறகு விரித்து,
    சொல்லுக்குஎட்டாத அழகு ஒன்றை நாடி எப்பொழுதுமே பறந்து கொண்டிருக்கிறது.
  • இந்தப் பகுதியின் ஆட்சிக்கு
    உட்பட்ட போதெல்லாம் வெறும் கற்பனையாகவே கதைகள் வருகின்றன.
  • மற்றொரு பகுதி எல்லோரையும்
    போல் மண்ணில் உழலுகிறது.
  • அப்பொழுதெல்லாம்உலகின்
    இன்ப துன்பங்களைப் பற்றி இயற்கையை ஒட்டிய முறையில் எழுதுகிறேன்"
  • "எழுதுவது ஒரு கலைஞனுக்கு
    இயல்பானது... மல்லிகை பூப்பது போல, விதைகள் விழுந்து மரமாவது போல... அறிவுக்குப் புலப்படாத
    பாலுணர்வின் தூண்டுதல் போல..."

பிற கவிஞர்களின் கருத்துக்கள்

  • பிச்சமூர்த்தியின் இலக்கிய
    வெளிப்பாடுகள் நிறைவறாத துறவு மோகத்தின் இன்னொரு வடிகாலாக இருந்தது – கவிஞர் எஸ். வைத்தீஸ்வரன்
  • இயற்கையையும் வாழ்க்கை
    அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான தத்துவ உண்மைகளைக் காணும்
    முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள் - புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும்
    நூலில் வல்லிக்கண்ணன்

















































































































































































No comments:

Powered by Blogger.