Ads Top

தை அமாவாசைக்கு கண்டிப்பாக வைக்க வேண்டிய பூசணி சாம்பார் / THAI AMAVASAI POOSANI SAMBHAR / PUMPKIN SAMBHAR

  • கோடை காலம் நெருங்கி வரயுள்ள நிலையில், உடலில் நீச்சத்துக்களின் அளவை அதிகரிக்க வேண்டியுள்ளது. அப்படி உடலின் நீச்சத்துக்கள் மற்றும் இதர சத்துக்களின் அளவை அதிகரிக்க, வெள்ளை பூசணிக்காயை உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது. 
  • அதனால்தான் தை மாதத்தில் வரும் அமாவாசையில் பூசணிக்காயை வைத்து சாம்பார் செய்து படையல் வைப்பதாக நம்பப்படுகிறது. இங்கு அந்த வெள்ளை பூசணிக்காயைக் கொண்டு எப்படி சாம்பார் வைக்கலாம் என்பதை தெரிந்துக் கொள்வோம்...
தேவையான பொருட்கள்
  • துவரம் பருப்பு - 1/2 கப்
  • தண்ணீர் - 2 கப்
  • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
  • வெள்ளை பூசணி - 1 கப்
  • எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
  • கடுகு - 1 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிது
  • வரமிளகாய் - 2
  • வெங்காயம் - 1
  • தக்காளி - 1
  • சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
  • முதலில் துவரம் பருப்பை நீரில் நன்கு கழுவி, குக்கரில் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் விசில் போனதும் குக்கரை திறந்து, பருப்பை மத்து கொண்டு மசித்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், வரமிளகாய் சேர்த்து தாளித்து, பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  • பிறகு அதில் தக்காளி சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கியதும், வெள்ளை பூசணியை சேர்த்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.
  • பின்பு அதில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, பின் மசித்து வைத்துள்ள பருப்பு, புளிச்சாறு மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு பச்சை வாசனை போக 5-8 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், வெள்ளை பூசணி சாம்பார் ரெடி.

No comments:

Powered by Blogger.