Ads Top

கண்ணதாசன் / KANNADASAN

  • கவியரசர் கண்ணதாசன் (ஜூன் 24, 1927 – அக்டோபர் 17, 1981) சிவகங்கை மாவட்டத்தில் சிறுகூடல்பட்டி என்னும் ஊரில் சாத்தப்பனார் – விசாலாட்சிக்கு ஜூன் 24, 1927 அன்று பிறந்தார்.
  • இவருடைய இயற்பெயர் முத்தையா. தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது.
  • இங்கு கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அரங்கம் ஒன்று உள்ளது. இங்கு 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது.
  • கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
  • இவர் கவியரசு எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
  • காவியங்கள், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், புதினங்கள் போன்ற இலக்கிய வடிவங்களில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
  • ஏராளமான திரைப்படப் பாடல்கள் எழுதியுள்ளார்.
  • இவர் தமிழக அரசவைக் கவிஞராகவும் இருந்துள்ளார்.
  • 1949ஆம் ஆண்டு "கலங்காதிரு மனமே" என்ற பாடலை எழுதி, திரைப்படப் பாடலாசிரியரானார்.
  • தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர்.
  • சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
சிறப்பு பெயர்கள்
  • கவியரசு
  • காரைமுத்து புலவர்,
  • வணங்காமுடி
  • பார்வதிநாதன்
  • ஆரோக்கியசாமி
  • கமகப்பிரியன்
  • கவியரசன்
  • கவிச்சக்கரவர்த்தி
படைப்புகள்
  • மாங்கனி
  • ஆட்டனத்தி ஆதிமந்தி
  • கவிதாஞ்சலி
  • பொன்மழை
  • அம்பிகா
  • அழகு தரிசனம்
  • பகவாத் கீதை விளக்கவுரை
  • ஸ்ரீ கிருஷ்னகவசம்
  • பாரிமலைக் கொடி
  • சந்தித்தேன் சிந்தித்தேன்
  • அனார்கலி
  • தெய்வ தரிசனம்
  • இயேசு காவியம் (5 பாகங்கள் 149 உட்பிரிவு - இறுதியாக எழுதிய காப்பியம்),
  • அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்),
  • பேனா நாட்டியம்
  • சுருதி சேராத ராகங்கள்
  • முற்றுப்பெறாத காவியங்கள்
  • பஜகோவிந்தம்
  • கிருஷ்ண அந்தாதி
  • கண்ணதாசன் கவிதைகள்.
நாவல்கள்
  • சேரமான் காதலி (சாகித்ய அகாடமி விருது)
  • குமரிக் காண்டம்
  • வேலன்குடித் திருவிழா
  • விளக்கு மட்டுமா சிவப்பு
  • ஆயிரங்கால் மண்டபம்
  • சிங்காரி பார்த்த சென்னை
  • ஊமையான் கோட்டை
  • இராஜ தண்டனை
  • சிவகங்கைச் சீமை

No comments:

Powered by Blogger.