Ads Top

பாரதியார் பற்றிய குறிப்பு / BHARATHIYAR

  • சுப்பிரமணிய பாரதி (சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி) (திசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921) தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் என்னும் ஊரில் சின்னசாமி – இலக்குமி அம்மையார்க்கு திசம்பர் 11, 1882 அன்று பிறந்தார்.
  • இவருடைய இயற்பெயர் சுப்பிரமணியன். இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார்.
  • பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்.

CLICK HERE TO EDIT YOUR PHOTO AND SIGNATURE FOR TNPSC APPLICATION - TNPSC PHOTO COMPRESSOR
  • சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டப்பநாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரச சபையால் வழங்கப்பட்டது.
  • சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையான சகோதரி நிவேதிதையை இவர் தமது குருவாக கருதினார்.
  • தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளரும், நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியும் ஆவார்.
  • தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்.
  • தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.
  • எட்டயப்புர சமஸ்தானப் புலவர்கள் “பாரதி” என்ற பட்டம் அளித்தனர். தம்மை “ஷெல்லிதாசன்” என்று அழைத்துக்கொண்டார்.
  • தம் பூணூலை கனகலிங்கம் என்ற ஆதி திராவிடற்கு அளித்தவர். தம் பாடல்களுக்கு தாமே மெட்டு அமைத்த கவிஞர்.
  • 1905இல் சக்கரவர்த்தினி என்ற இதழ் தொடங்கினார். கர்மயோகி, பாலபாரத் ஆகிய இதழை நடத்தினார். சுதேசி மித்திரன் என்ற இதழின் துணையாசிரியர் ஆக பணிப்புரிந்தார். ”இந்தியா” என்ற இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார். சென்னை ஜனசங்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார்.
  • நிவேதிதா தேவியைச் சந்தித்த பின் தீவிரவாதி ஆனார். இவரின் இவர் “தம்பி” என அழைப்பது = பரலி நெல்லையப்பர்.
  • பாரதியார் பாடல்களை முதன் முதலில் மக்களுக்கு அறிமுகம் செய்தவர் பரலி நெல்லையப்பர். பாரதியார் பாடல்களை முதலில் வெளியிட்டவர் = கிருஷ்ணசாமி ஐயர்.
  • பாரதியின் படத்தை வரைந்தவர் “ஆர்ய என்ற பாஷ்யம்”. பாரதிக்கு “மகாகவி” என்ற பட்டம் கொடுத்தவர் வ.ரா (ராமசாமி ஐயங்கார்).
  • பாரதி சங்கத்தை தொடங்கியவர் = கல்கி. மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார்
  • இவரின் முதல் பாடல் வெ111ளிவந்த இதழ் = விவேகபானு (1904, தலைப்பு = தனிமை இரக்கம்). இவர் கீதையை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 55
  • பதஞ்சலி சூத்திரத்திற்கு உரை எழுதி உள்ளார். தாகூரின் சிறுகதைகள் 11ஐத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
  • பாரதியார் நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்தில், “தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் பொது எனக்கு வருத்தம் உண்டாகிறது.
  • தமிழனை விட மற்றொரு சாதி அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்குச் சம்மதமில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
  • உரைநடை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, “கூடிய வரை பேசுவது போலவே எழுதுவது தான் உத்தமம் என்பது என்னுடைய கட்சி” என்கிறார்.
  • தமிழில் முதன் முதலில் கருத்துப்படங்கள் வெளியிட்டவர் இவரே.
  • கவிதையில் சுயசரிதம் எழுதிய முதல் கவிஞர் இவரே. பாரதியின் சுயசரிதமே தமிழின் முதல் சுயசரிதம். அனைவரும் தாய்நாடு எனக் கூற பாரதி மட்டும் தந்தையர் நாடு எனக் கூறியவர்.
  • பாரதி சக்தி மகா காவியம் – சுத்தானந்த பாரதியார்.
  • 2021 முதல் தமிழக அரசின் சார்பில் “செப்டம்பர் 11” ஆம் தேதி “மகாகவி நாள்” ஆக ஆண்டு தோறும் கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலைப் போருக்கு வித்திட்டவர்.
  • கவிதைகள் மட்டுமன்றி, சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களையும் வசன கவிதைகளையும் சீட்டுக்கவிகளையும் எழுதியவர்.
  • சிந்துக்குத் தந்தை செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார்.
சிறப்பு பெயர்
  • பாட்டுக்கொரு புலவன் 
  • நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா
  • சிந்துக்குத் தந்தை, தற்காலத் தமிழிலக்கியத்தின் விடிவெள்ளி
  • தேசிய கவி 
  • மக்கள் கவி
  • மகாகவி (வ.ரா பெயரிட்டார்) 
  • ஷெல்லிதாசன்
  • காளிதாசன்
  • சக்திதாசன்
  • சாவித்திரி
  • ஓர் உத்தம தேசாபிமானி
  • நித்திய தீரர்
படைப்புகள்
  • குயில் பாட்டு
  • கண்ணன் பாட்டு
  • சுயசரிதை
  • தேசிய கீதங்கள் 
  • பாரதி அறுபத்தாறு
  • ஞானப் பாடல்கள்
  • தோத்திரப் பாடல்கள்
  • விடுதலைப் பாடல்கள்
  • விநாயகர் நான்மணிமாலை
  • பாரதியார் பகவத் கீதை (பேருரை) 
  • பதஞ்சலியோக சூத்திரம்
  • நவதந்திரக்கதைகள்
  • உத்தம வாழ்க்கை சுதந்திரச்சங்கு
  • ஹிந்து தர்மம் (காந்தி உபதேசங்கள்)
  • சின்னஞ்சிறு கிளியே
  • ஞான ரதம்
  • பகவத் கீதை
  • சந்திரிகையின் கதை
  • பாஞ்சாலி சபதம்
  • புதிய ஆத்திசூடி
  • பொன் வால் நரி
  • ஆறில் ஒரு பங்கு
  • தராசு
  • முரசு
  • பாப்பா பாட்டு
இதழ்கள்
  • இந்தியா
  • சுதேசமித்திரன்

No comments:

Powered by Blogger.