Ads Top

பழமொழி நானூறு / PAZHAMOZHI NANOORU

  • பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார்.
  • முன்றுறை என்பது ஊர் பெயர்.
  • அரையன் என்ற பட்டம் பெற்றவர் என்றும் கூறுவர் சிலர்.
  • அரையன் என்ற சொல் அரசனைக் குறிக்கும்.
  • முன்றுறை என்ற ஊரை ஆண்ட அரசனாக இருக்கலாம் அல்லது அரையன் என்பது புலவரின் குடிபெயராக இருக்கலாம்.
  • இவர் கி.பி. (பொ.ஆ.) நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர்.
  • பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் இவர் சமண சமயத்தை சேர்ந்தவர் என அறிய முடிகிறது.
  • பழமொழி நானூறு பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இது நானூறு பாடல்களைக் கொண்டது.
  • ஒவ்வொரு பாடலின் இறுதியில் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் இது பழமொழி நானூறு என்னும் பெயர் பெற்றது.
  • பாவகை = வெண்பா
  • இந்நூலை பதிப்பித்தவர் = செல்வசேகர முதலியார்
  • இதில் கூறப்பட்டுள்ள பழ மொழிகள் இலக்கியம் சார்ந்தவையாகும்.
  • ஆற்றுணா வேண்டுவது இல்” என்பதற்கு “கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டாம்” என்பது பொருள்
  • உள்ளடக்கிய பொருள்வகை = அறம்
வேறு பெயர்கள்
  • பழமொழி
  • உலக வசனம்
  • முதுமொழி
  • முதுசொல் (தொல்காப்பியர்)
பெயர்க்காரணம்
  • ஒரு கதையோ, வரலாற்று நிகழ்வோ கட்டி உரைக்கப்பட்டு பாடலின் இறுதியில் பழமொழி நீதி சுட்டப்படுவதாலும், நானூறு பாடல்களை உடையதாலும் பழமொழி நானூறு எனப் பெயர்பெற்றது.
நூல் பகுப்பு முறை
  • இந்நூலின் பெரும் பிரிவுகள் = 5, இயல்கள் = 34
  • பிரிவு 1 = கல்வி, ஒழுக்கம், புகழ் பற்றியது (9 இயல்கள்)
  • பிரிவு 2 = சான்றோர், நட்பின் இயல்பு பற்றியது (7 இயல்கள்)
  • பிரிவு 3 = முயற்சி, பொருள் பற்றியது (8 இயல்கள்)
  • பிரிவு 4 = அரசர், அமைச்சர், பாடல் பற்றியது (6 இயல்கள்)
  • பிரிவு 5 = இல்வாழ்க்கை, உறவினர், வீடுநெறி பற்றியது (4 இயல்கள்)
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள முப்பெரும் அறநூல்கள்
  • திருக்குறள்
  • நாலடியார்
  • பழமொழி நானூறு
  • தொல்காப்பியர் பழமொழியை “முதுமொழி” என்கிறார்.
  • பழமொழி என்ற சொல் முதன் முதலில் அகநானூறில் வருகிறது. 
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் மிகுதியாக வரலாற்று குறிப்புகளை கூறும் நூல் இதுவே

No comments:

Powered by Blogger.