Ads Top

நாலடியார் / NALATIYAAR


ஆசிரியர் குறிப்பு
  • சமண முனிவர்கள்
பெயர்க்காரணம்
  • நான்கு அடிகளால் ஆன நானூறு பாடல்களை கொண்டதால் நாலடி நானூறு என்றும் நாலடியார் என்றும் அழைக்கப்படுகிறது
நூற்குறிப்பு
  • நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
  • திருக்குறளுக்கு அடுத்த படியாகப் போற்றப்படும் நீதி நூலாகும்.
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள "ஒரே தொகை நூல்" நாலடியார் ஆகும்.
  • 400 பாடல்கள், 40 அதிகாரங்கள்
  • சமண சமயம் சார்ந்தது
  • முத்தரையரை பற்றி கூறும் நூல்
  • அறக்கருத்துக்களைக் கூறுவதாகும்.
  • பா வகை - வெண்பா
  • இயற்றப்பட்ட காலம் - கி.பி.250 ஐ ஒட்டிய காலம்
  • உள்ளடக்கிய பொருள்வகை – அறம்
  • நாலடியாரின் உரைகளை உள்ளடக்கியது “நாலடியார் உரைவளம்” என்னும் நூல்.
  • ஜி.யூ.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்
  • முப்பெரும் அற நூல்கள் = திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு
  • நாலடியாரில் முதல் இயல் = துறவறவியல்
  • நூலை தொகுத்தவர் = பதுமனார்
  • நூலை முப்பாலாக பகுத்தவர் = தருமர்
நூல் பகுப்பு
  • இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது
  • அறத்துப்பால் = 13 அதிகாரங்கள்
  • பொருட்பால் = 24 அதிகாரங்கள்
  • இன்பத்துப்பால் = 3 அதிகாரங்கள்
சிறப்புப்பெயர்
  • நாலடி
  • நாலடி நானூறு
  • வேளாண் வேதம்
  • திருக்குறளின் விளக்கம்
நூலிற்கு உரை கண்டவர்
  • தருமர்
  • பதுமனார்

No comments:

Powered by Blogger.